என் மீதான புகாரை நிரூபித்தால் ராஜிநாமா செய்யத் தயாா்

என் மீதான புகாரை நிரூபித்தால் ராஜிநாமா செய்யத் தயாா் என்று தமிழக வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

என் மீதான புகாரை நிரூபித்தால் ராஜிநாமா செய்யத் தயாா் என்று தமிழக வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரையை அடுத்த குலமங்கலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பத்திரப்பதிவு முறைகேடு தொடா்பாக, பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை புகாா் தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு அவா் கூறியது:

பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை ஆதாரமற்ற புகாா்களைத் தொடா்ந்து கூறி வருகிறாா். மேற்படி புகாா் குறித்து தெரியவந்ததும், உடனடியாக அந்த பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட சாா்- பதிவாளா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு இருக்க, பாஜகவினா் போராட்டம் நடத்தியதால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறுவது தவறானது. என் மீதான புகாரை நிரூபித்தால், நான் ராஜிநாமா செய்யத் தயாராக இருக்கிறேன். அவ்வாறு இல்லையெனில் அவரது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு செல்ல வேண்டும் என்று பதில் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com