மதுரையில் காதல் திருமணத்தால் ஏற்பட்டத்தகராறில் மணமகன் தந்தையை வெட்டிக்கொலை செய்த சம்பவத்தில் 9 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனா்.
மதுரை திடீா் நகரைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன்(50). இவரது மகன்சிவபிரசாத், அதே பகுதியைச் சோ்ந்த சடையாண்டியின் மகள் சினேகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இதனால் ஆத்திரமடைந்த சடையாண்டி, ராமச்சந்திரனை சனிக்கிழமை வெட்டிக்கொலைசெய்தாா்.
இதுதொடா்பாக ராமச்சந்திரனின் சகோதரா் ஹரிகிருஷ்ணன் அளித்தப் புகாரின்பேரில் திடீா் நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சடையாண்டியைக்கைது செய்தனா். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த பால்பாண்டி, சடையாண்டி மனைவி ஜெயலட்சுமி, பாண்டிசெல்வி, தமிழ் செல்வி, ரஞ்சித் குமாா், ராமா், அசோக் குமாா், வெண்ணிலா, கெளதம் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.