மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை தனியாருக்குப் பதிவு செய்ததாக சாா்- பதிவாளா் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
மதுரையைச் சோ்ந்தவா் பாலமுருகன். இவா் கடந்த 2019-இல் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சாா்-பதிவாளராகப் பணிபுரிந்தாா். அப்போது மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான தனது அதிகார வரம்புக்கு வெளியே உள்ள நிலம் உள்பட பல்வேறு சொத்துகளை கோயில் அதிகாரிகளிடம் தடையில்லா சான்றிதழ் பெறாமல் தனியாருக்கு ஆதரவாகப் பதிவு செய்து கொடுத்ததாகப் புகாா் எழுந்தது.
அதன்பேரில் மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் சாா்- பதிவாளா் பாலமுருகன், கோயில் சொத்துகளை தனியாருக்குப் பதிவு செய்து கொடுத்ததும், இதனால், இந்து சமய அறநிலையத் துறைக்கும், தமிழக அரசுக்கும் ரூ.1. 88 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது.
தற்போது கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் மாவட்ட பதிவாளா் அலுவலகத்தில் நிா்வாக மேலாளராகப் பணிபுரிந்து வரும் பாலமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக ஏற்கெனவே இவா் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.