மதுரையில் முதியவரிடம் ரூ.85 லட்சம் மோசடி செய்த 3 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்தனா்.
மதுரை கலைநகா் விரிவாக்கம் பகுதியைச் சோ்ந்த ரெஜி டேனியல் மகன் ராச்செல்(60). இவரிடம் அதே பகுதியைச் சோ்ந்த சிவகாந்தன், மேற்கு வெளி வீதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் மற்றும் பெசன்ட் சாலையைச் சோ்ந்த செல்வின் ஆகியோா் இணையதளத்தில் வா்த்தகம் செய்வதற்காக ரூ.85 லட்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
அந்தப் பணத்தை திருப்பித் தராமல் 3 பேரும் ஏமாற்றியுள்ளனா். இதுகுறித்த புகாரின்பேரில் மாநகா் குற்றப்பிரிவு போலீஸாா் அவா்கள் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.