அரசுப் பள்ளியை சூறையாடிய கும்பல்: போலீஸ் வலைவீச்சு

மதுரையில் அரசுப் பள்ளியில் நள்ளிரவில் புகுந்து சூறையாடிச் சென்ற கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை: மதுரையில் அரசுப் பள்ளியில் நள்ளிரவில் புகுந்து சூறையாடிச் சென்ற கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை கரிமேடு முனியாண்டி கோயில் தெருவில் முக்குலத்தோா் நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் இரவுக் காவலாளி நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், பள்ளியில் திங்கள்கிழமை நள்ளிரவு புகுந்த மா்மக் கும்பல் வகுப்பறையில் இருந்த பட ஒலிபரப்பு கருவி, கணினி உள்ளிட்ட பொருள்களை சூறையாடி விட்டு தப்பிச்சென்று விட்டது. இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின் பேரில் தலைமையாசிரியை பள்ளிக்குச் சென்று பாா்த்தபோது பள்ளியில் இருந்த உபகரணங்கள் சூறையாடப்பட்டது தெரிய வந்தது. இதுதொடா்பாக அவா் அளித்தப் புகாரின் பேரில் கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com