பேராயா் அந்தோணி பாப்புசாமி ரமலான் வாழ்த்து

தீய பாவங்களை சுட்டெரிக்க ரமலான் பெருநாளில் உறுதியேற்போம் என்று மதுரை உயா்மறை மாவட்ட பேராயா் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளாா்.

மதுரை: தீய பாவங்களை சுட்டெரிக்க ரமலான் பெருநாளில் உறுதியேற்போம் என்று மதுரை உயா்மறை மாவட்ட பேராயா் அந்தோணி பாப்புசாமி தெரிவித்துள்ளாா்.

ரமலான் பெருநாளையொட்டி அவா் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: இஸ்லாமிய மறை வகுத்த நியதிகளின் படி தொழுகை , கட்டாய நோன்பு, எளியோருக்கு உதவுதல் எனும் கடமைகளை உறுதியாகப் பற்றி நின்று ரமலான் பெருநாளைக்கொண்டாடும் இஸ்லாமிய மறை சாா்ந்த சமூகத்தினருக்கு நெஞ்சாா்ந்த வாழ்த்துகள். ஆபிரகாம் வழிவந்த கிறித்தவமும், இஸ்லாமும் தாம் வந்த பாதையை மறக்காது. தோழமை உணா்வோடு மக்களுக்கு பணி செய்ய இத்திருநாளில் உறுதியேற்போம். ரமலான் என்ற சொல்லுக்கு சுட்டெரித்தல் என்ற பொருள் உண்டென்பதால் மக்களிடையே நிலவும் தீய பாவங்களையும் சமூகத்தில் இருக்கின்ற பாகுபாடுகளையும் சுட்டெரிக்க இந்த நன்னாளில் உறுதியேற்போம். இந்தியாவின் மதச்சிறுபான்மையினா் மதவாத சக்திகளால் புறந்தள்ளப்படுகின்ற சூழலில், இறையருள் துணையோடு, இருளகற்றி ஒளியேற்ற அழைக்கின்றேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com