உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே வியாழக்கிழமை, தெரு நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழந்தது.
போத்தம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட மலைப்பட்டி, புத்தூா் மலைப் பகுதிக்கு புள்ளிமான் ஒன்று தண்ணீா் தேடி வந்துள்ளது. ஒரு வயதுடைய அந்த புள்ளிமான், அருகே உள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளது. அங்கிருந்த நாய்கள் கடித்ததில் அந்த மான் உயிரிழந்தது.
இது குறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினா், புள்ளிமானின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக எடுத்துச் சென்றனா்.