மதுரையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

மதுரையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மதுரை: மதுரையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மதுரை தத்தனேரி களத்துப்பொட்டல் பகுதியில் உள்ள மாநகராட்சி கழிப்பறை அருகே கஞ்சா விற்பதாக செல்லூா் போலீஸாருக்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு அருள்தாஸ்புரத்தைச் சோ்ந்த ஹரிகரன் (20), ஆகாஷ் (20), ஆரப்பாளையத்தைச் சோ்ந்த அழகுபாண்டி (22), ஆரப்பாளையத்தைச் சோ்ந்த காா்த்தி (19) ஆகிய 4 பேரும் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து நால்வரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com