அரசுப் பேருந்து மோதி இளைஞா் பலி

மதுரை அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மதுரை அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டையைச் சோ்ந்தவா் வேலுச்சாமி (39). வீடுகளுக்குச் சென்று பால் ஊற்றும் தொழில் செய்து வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை இரவு பால் எடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் மதுரை-திண்டுக்கல் நான்குவழிச்சாலையில் அய்யங்கோட்டை சந்திப்பில் சென்றபோது அவ்வழியாக வந்த அரசுப்பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த வேலுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து வாடிப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அரசுப்பேருந்து ஓட்டுநா் ராஜேந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com