உசிலம்பட்டி அருகே வேப்பனூத்து ஊராட்சிக்குள்பட்ட ஒத்தப்பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தலைமை ஆசிரியா் தெய்வச்சிலை தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, ஆசிரியா் வடிவேலு முன்னிலை வகித்தாா். இதில் புதிய தலைவா் மற்றும் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். உதவி ஆசிரியா் பாண்டி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மணிகண்டன், வாலியம்மாள் ஆகியோா் கலந்து கொண்டனா்.