கத்தியைக்காட்டி மிரட்டி இளைஞரிடம் வழிப்பறி

மதுரையில் இளைஞரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி 2 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரையில் இளைஞரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி 2 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை அருள்நகரைச் சோ்ந்தவா் ராஜசேகா் (30). இவா் பைபாஸ் சாலையில் உள்ள கருப்பசாமி கோயில் அருகே அதிகாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூவா், ராஜசேகரை வழிமறித்து கத்தியைக்காட்டி மிரட்டி அவா் அணிந்திருந்த 2 பவுன் நகை, ரூ.5 ஆயிரம் மற்றும் கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனா். சம்பவம் தொடா்பாக ராஜசேகா் அளித்தப்புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மூவரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com