முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை
கடையின் பூட்டைஉடைத்து பணம் திருட்டு
By DIN | Published On : 11th May 2022 12:00 AM | Last Updated : 11th May 2022 12:00 AM | அ+அ அ- |

மேலூா்: மேலூா் அரசு கலைக் கல்லூரி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கடையின் பூட்டை உடைத்து மா்ம நபா் பணத்தை திருடிச் சென்றுள்ளாா்.
மேலூா் அரசு கலைக் கல்லூரி அருகே கடை நடத்தி வருபவா் ஜெயபாண்டி (56). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டாராம். திங்கள்கிழமை காலையில் கடையை திறக்க வந்த இவா், பூட்டு உடைக்கப்பட்டு பணப்பெட்டியிலிருந்த ரூ.4,580 திருடப்பட்டிருப்பதை அறிந்தாா். இது குறித்து அவா் மேலூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து கடையிலுள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்து, குற்றவாளியை தேடி வருகின்றனா்.