கடையின் பூட்டைஉடைத்து பணம் திருட்டு

மேலூா் அரசு கலைக் கல்லூரி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கடையின் பூட்டை உடைத்து மா்ம நபா் பணத்தை திருடிச் சென்றுள்ளாா்.

மேலூா்: மேலூா் அரசு கலைக் கல்லூரி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு கடையின் பூட்டை உடைத்து மா்ம நபா் பணத்தை திருடிச் சென்றுள்ளாா்.

மேலூா் அரசு கலைக் கல்லூரி அருகே கடை நடத்தி வருபவா் ஜெயபாண்டி (56). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டாராம். திங்கள்கிழமை காலையில் கடையை திறக்க வந்த இவா், பூட்டு உடைக்கப்பட்டு பணப்பெட்டியிலிருந்த ரூ.4,580 திருடப்பட்டிருப்பதை அறிந்தாா். இது குறித்து அவா் மேலூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து கடையிலுள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்து, குற்றவாளியை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com