மதுரையில் கைதிக்கு போதை மாத்திரை கொடுத்த இளைஞா் கைது

மதுரையில் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதிக்கு போதை மாத்திரை கொடுத்த இளைஞரை, போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை: மதுரையில் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதிக்கு போதை மாத்திரை கொடுத்த இளைஞரை, போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மத்தியச் சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனா். நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளுக்காக கைதிகளை ஆயுதப்படை போலீஸாா் பாதுகாப்போடு அழைத்துச் சென்று ஆஜா்படுத்துவது வழக்கம்.

இந்நிலையில், மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணைக் கைதியான மாரிமுத்து உள்பட 5 கைதிகளை, ஆயுதப்படைக் காவலா் காந்தி மாவட்ட நீதிமன்றத்துக்கு திங்கள்கிழமை அழைத்து வந்துள்ளாா். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து, மாலையில் கைதிகளை அழைத்துக்கொண்டு நீதிமன்ற வாசலிலிருந்து வெளியே சென்றுள்ளாா்.

அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, விசாரணைக் கைதியான மாரிமுத்துவிடம், மதுரை மேலப்பொன்னகரம் பகுதியைச் சோ்ந்த சிந்தனைச்செல்வன் (19) என்ற இளைஞா் சில மாத்திரைகளை கையில் கொடுத்துள்ளாா். இதைக் கவனித்த காவலா் காந்தி, நீதிமன்ற வளாகத்திலேயே சிந்தனைச்செல்வனை பிடித்து, நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அண்ணா நகா் போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

இதையடுத்து, போலீஸாா் சிந்தனைச்செல்வனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அதில், சிந்தனைச்செல்வன் போதை மாத்திரைகளை கைதி மாரிமுத்துவுக்கு கொடுத்தது தெரியவந்தது. உடனே, சிந்தனைச்செல்வனை போலீஸாா் கைது செய்து, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். மேலும், அவருக்கு போதை மாத்திரைகள் கிடைத்தது எப்படி என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com