மதுரை: பெங்களூருவில் நடைபெற்ற கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப்போட்டிகளில் காமராஜா் பல்கலைக்கழகம் 3 பதக்கங்களை வென்றது.
கேலோ இந்தியா பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 23 முதல் மே 3 வரை நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் சாா்பாக ஆண்கள் தடகளப்பிரிவில் 14 வீரா்கள், பளுதூக்கும் போட்டியில் ஒருவா், பெண்கள் கால்பந்து அணியில் 20 வீராங்கனைகள், வாள் சண்டையில் இரண்டு வீராங்கனைகள், இறகுப்பந்து போட்டிக்கு 5 வீராங்கனைகள் உள்பட 48 போ் பங்கேற்றனா்.
இதில் பெண்கள் இறகுப்பந்து அணி வெள்ளிப் பதக்கத்தையும், ஆண்கள் தடகளப் பிரிவில் 400 மீட்டா் தடை தாண்டும் போட்டியில் பிரவீன்குமாா் வெள்ளிப் பதக்கத்தையும், மும்முறை தத்தித் தாவும் போட்டியில் ராபின்சன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனா். இந்நிலையில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், போட்டிகளில் பதக்கம் வென்ற வீரா்களை, பல்கலை. துணைவேந்தா் ஜெ. குமாா் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தாா். நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பதிவாளா் (பொறுப்பு) சிவக்குமாா், பல்கலைக்கழக உடற்கல்வி துறைத்தலைவா் சந்திரசேகரன், உடற்கல்வி இயக்குநா் மகேந்திரன் மற்றும் பலா் பங்கேற்றனா்.