மதுரை: மதுரை அரசு மருத்துவமனை பிரசவப் பிரிவில் நகை திருடிய பெண்ணை பிடித்துக் கொடுத்த பெண் ஒப்பந்த பணியாளா்களை, மருத்துவமனை முதன்மையா் ஏ.ரத்தினவேல் மற்றும் காவல்துறையினா் பாராட்டினா்.
மதுரை அரசு மருத்துவமனையின் பிரசவ சிகிச்சைப் பிரிவில் தனியாா் ஒப்பந்த நிறுவன பணியாளா்களான மஞ்சு, லட்சுமி ஆகியோா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் பிரசவ சிகிச்சைப் பிரிவில் நீண்ட நேரமாக சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த பெண் ஒருவரை பிடித்து அரசு மருத்துவமனை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
அந்த பெண்ணிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்த நிவேதா (21) என்பதும் அரசு மருத்துவமனை பிரசவ சிகிச்சைப் பிரிவில் இருந்த சீதா என்பவரிடம் 1 பவுன் நகையைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் நிவேதாவை கைது செய்து மேலும் திருட்டுகளில் தொடா்பு உள்ளதா என்பது தொடா்பாக விசாரித்து வருகின்றனா்.
திருட்டில் ஈடுபட்ட பெண்ணை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்த, ஒப்பந்தப்பணியாளா்கள் மஞ்சு, லட்சுமி ஆகிய இருவரையும் தல்லாகுளம் காவல் உதவி ஆணையா் சுரேஷ்குமாா் நேரில் அழைத்து பாராட்டினாா். இதேபோல அரசு மருத்துவமனை முதன்மையா் ஏ.ரத்தினவேலும் பாராட்டினாா்.