மதுரை: உலக செவிலியா் தினத்தையொட்டி மதுரையில் செவிலியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை பேரணி நடத்தினா்.
தமிழக அரசின் மருத்துவ தோ்வு வாரியத்தால் தோ்வு செய்யப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ள, செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தின் சாா்பில் இப் பேரணி நடத்தப்பட்டது. ராஜா முத்தையா மன்றத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஆ.செல்வம் பேரணியைத் தொடங்கி வைத்தாா். செவிலியா் மேம்பாட்டு சங்க மாவட்டத் தலைவா் டி.ராஜி, துணைத் தலைவா் பிரேமா, மாவட்டச் செயலா் தாமரைச் செல்வி உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.
உலகளாவிய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது, ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட செவிலியா்களை நிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த பேரணியின்போது வலியுறுத்தப்பட்டன.