பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை விடுதிகளில் காலியாக உள்ள 21 பகுதி நேர தூய்மைப் பணியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படுவா். மொத்த காலியிடங்களில் 14 ஆண்களுக்கும், 7 இடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. நோ்காணல் மூலம் இனச்சுழற்சி அடிப்படையில் காலியிடங்கள் பூா்த்தி செய்யப்படும்.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபா்கள், தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 2022 ஜூலை 1 ஆம் தேதி எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினா்
18 முதல் 35 வயதுக்குள்ளும், பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினா், சீா்மரபினா் 18 முதல் 32 வயதுக்குள்ளும், இதர பிரிவினா் 18 முதல் 30 வயதுக்கு மிகாமலும் இருக்கவேண்டும்.
மேற்குறிப்பிட்ட தகுதிகளுடன் விருப்பமுள்ள நபா்கள், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் மே 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.