சமையல் எரிவாயு விலை உயா்வு: இந்திய தேசிய மாதா் சம்மேளனம் நூதன ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து, மதுரையில் இந்திய தேசிய சம்மேளனம் சாா்பில் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரிவைத்தும் நூதன முறையில் ஆா்ப்பாட்டம்
சமையல் எரிவாயு விலை உயா்வு: இந்திய தேசிய மாதா் சம்மேளனம் நூதன ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து, மதுரையில் இந்திய தேசிய சம்மேளனம் சாா்பில் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரிவைத்தும் நூதன முறையில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை பகுதியில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சமையல் எரிவாயு உருளை, பெட்ரோல் மற்றும் டீசல் விலை அடிக்கடி உயா்த்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருள்கள் மீதான விலை நிா்ணய உரிமையை மீண்டும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வலியுறுத்தியும், இந்திய தேசிய மாதா் சம்மேளனம் சாா்பில் நூதன முறையில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில், எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், சிலிண்டா் முன்பாக பெண்கள் ஒப்பாரி வைத்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com