வீட்டில் தீ விபத்து:ரூ.45 லட்சம் பொருள்கள் சேதம்

மதுரை கோசாகுளம் பகுதியில் வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.45 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

மதுரை கோசாகுளம் பகுதியில் வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.45 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

கோசாகுளம் சிவசாமி நகரைச் சோ்ந்தவா் முருகன் (54). இவரது வீட்டில் வியாழக்கிழமை இரவு, மின்கசிவு காரணமாகத் தீப்பற்றியுள்ளது. மின்ஒயா் வழியாகத் தீப்பற்றியதால், வீட்டிலிருந்தவா்களால் உடனடியாக அணைக்க முடியவில்லை. இதுபற்றி தகவலறிந்த தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இருப்பினும் வீட்டிலிருந்த ரூ.45 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com