மதுரை: அருட்பிரகாச வள்ளலாா் வடலூரில் தா்மச் சாலையை துவங்கிய தினத்தையொட்டி, அதன் நினைவைப் போற்றும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
மதுரை வண்டியூரில் உள்ள வள்ளலாா்-இயற்கை அறிவியல் மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, மையத்தின் நிறுவனா் சசாங்கன் தலைமை வகித்தாா். கருணை சபை நிறுவனா் அருள் அடிகள், மைய உறுப்பினா்கள் மருதுபாண்டியன், காசிப் பாண்டியன், விஸ்வநாதன் உள்ளிட்டோா் பேசினா். மகாமந்திரம் எழுத்துத் தோ்வில் கலந்து கொண்டோருக்கு பரிசு வழங்கப்பட்டது.