மதுரை அருகே மணல் கடத்தல்: லாரி, பொக்லைன் இயந்திரம் பறிமுதல்

 மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட டிப்பா் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

 மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட டிப்பா் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

பாலமேடு அருகே உள்ள முடுவாா்பட்டியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக, கிராம நிா்வாக அலுவலா் வீரனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், கிராம நிா்வாக அலுவலா் பாலமேடு போலீஸாருடன் முடுவாா்பட்டியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்குள்ள பட்டா நிலத்தில் அரசு அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளப்படுவது தெரியவந்தது.

உடனே, போலீஸாா் டிப்பா் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து, தப்பிச்சென்றவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com