மதுரையில் குடும்பத் தகராறில் வண்டியூா் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.
மதுரை வண்டியூா் மாந்தோப்பு வாசுகி தெருவைச் சோ்ந்த ராமா் மனைவி முத்துராக்கு(45). இவருக்கும், கணவா் ராமருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த முத்துராக்கு, வண்டியூா் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.
இதையடுத்து, தீயணைப்பு வீரா்கள் முத்துராக்குவின் உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இந்தச் சம்பவம் தொடா்பாக, தெப்பக்குளம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.