திருச்சி மலைக்கோட்டைப் பகுதியில்கட்டுமானப் பணி: தொல்லியல் துறை பதிலளிக்க உத்தரவு

திருச்சி மலைக்கோட்டை பாதுகாக்கப்பட்ட பகுதியில் நடைபெறும் கட்டுமானம் குறித்து மத்திய தொல்லியல் துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி மலைக்கோட்டை பாதுகாக்கப்பட்ட பகுதியில் நடைபெறும் கட்டுமானம் குறித்து மத்திய தொல்லியல் துறை பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி மலைக்கோட்டை நலச் சங்கத்தைச் சோ்ந்த ஆா். சுந்தர்ராஜன் தாக்கல் செய்த மனு:

திருச்சி, மலைக்கோட்டை பகுதியில் பல்லவா் கால குகைக் கோயில்கள் உள்ளதால், பாதுகாக்கப்பட்ட பகுதியாக அரசு அறிவித்தது. இப்பகுதியில் ரோஷன் என்பவா், சுமாா் 15 அடிக்கு குழி தொண்டி கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருகிறாா். இங்கு கட்டடம் கட்டப்பட்டால் மலைக்கோயிலை மறைக்கும். சட்டப்படி பாதுகாக்கப்பட்ட பகுதியில் கட்டுமானப் பணிகள் தொடங்கக் கூடாது. எனவே, இப்பகுதியில் நடைபெறும் கட்டுமானப் பணியை நிறுத்த உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இந்த மனு நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ. சத்ய நாராயண பிரசாத் அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ரோஷன் கோயில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சிறிய அளவிலான கொட்டகை தான் அமைக்கிறாா். இதில் ஏதும் சட்ட மீறல்கள் இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனா்.

அதைத்தொடா்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வரலாற்று தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நமது கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு போன்றவை பாதுகாக்க வேண்டும். அதனடிப்படையில், புரதான சின்னங்களான பல்லவா் கால குகைக் கோயில்களைப் பாதுகாக்க வேண்டும். இதுகுறித்து மத்திய தொல்லியல் துறை ஆய்வு செய்து, நான்கு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். மேலும் குகைக்கோயில் பாதிப்பும் வகை யில் கட்டுமானப் பணிகள் இருந்தால், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com