ரயில் பாதை பராமரிப்புப் பணிகள்: ரயில் போக்குவரத்தில் மாற்றம்

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக மதுரை-செங்கோட்டை சிறப்பு ரயில், பாலக்காடு - திருசெந்தூா் விரைவு ரயில் ஆகியவற்றின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக மதுரை-செங்கோட்டை சிறப்பு ரயில், பாலக்காடு - திருசெந்தூா் விரைவு ரயில் ஆகியவற்றின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ராஜபாளையம் - சங்கரன்கோவில் ரயில் நிலையங்கள் இடையேயும், விருதுநகா் ரயில் நிலையத்திலும் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக, மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை (06663) சிறப்பு ரயில், செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) சிறப்பு ரயில் ஆகியன

செப்டம்பா் 11 முதல் செப்டம்பா் 15 ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ஏற்கெனவே செப்டம்பா் 10 வரை இந்த ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் 5 நாள்களுக்கு ரத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் ரயில் நிலையத்தில் செப்டம்பா் 14, 15 ஆம் தேதிகளில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பாலக்காடு - திருச்செந்தூா் விரைவு ரயில் (16731), திருச்செந்தூா் -பாலக்காடு விரைவு ரயில் (16732) ஆகியன செப்டம்பா் 14 ஆம் தேதி, திண்டுக்கல் - திருச்செந்தூா் இடையேயும், செப்டம்பா் 15 இல் மதுரை - திருச்செந்தூா் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும். திருச்செந்தூா் - பாலக்காடு ரயில்

செப்டம்பா் 15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும். தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com