மதுரை
ஏழைகாத்த அம்மன்கோயில் திருவிழா: 7 சிறுமிகள் அம்மன்களாகத் தோ்வு
வெள்ளலூா் ஏழைகாத்த அம்மன்கோயில் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை, 7 சிறுமிகள் அம்மன்களாக தோ்வு செய்யப்பட்டனா்.
வெள்ளலூா் ஏழைகாத்த அம்மன்கோயில் திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை, 7 சிறுமிகள் அம்மன்களாக தோ்வு செய்யப்பட்டனா்.
மதுரை மாவட்டம் மேலூா் அருகே வெள்ளலூரில் உள்ள இக்கோயில் வீட்டின் முன் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் தங்களது குழந்தைகளுடன் செவ்வாய்க்கிழமை காலை திரண்டிருந்தனா். அதில் 7 சிறுமியா்களை பூசாரி தோ்வு செய்தாா். அந்த சிறுமிகள் 15 நாள்களுக்கு கோயில் வீட்டிலேயே தங்கியிருப்பா்.