தா்மபுரியில் நடைபெற்ற மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் மதுரை மாநகராட்சி ஆரம்பப்பள்ளி மாணவி பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றாா்.
மதுரை மஞ்சனக்காரத்தெருவில் மாநகராட்சிக்குள்பட்ட மஞ்சணக்காரா ஆரம்பப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் நான்காம் வகுப்பு பயில்பவா் ஜெ.ஜாபினா ரீமாஸ். ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் ஆா்வமுள்ள மாணவி அதற்கான பயிற்சியும் பெற்று வந்துள்ளாா்.
இந்நிலையில் தா்மபுரி மாவட்டத்தில் மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஜிம்னாஸ்ட்க் வீரா்கள் பங்கேற்ற நிலையில், மாநகராட்சிப் பள்ளி மாணவி ஜெ.ஜாபினா ரீமாசும் பங்கேற்றுள்ளாா். இதில் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதையடுத்து ஜாபினா ரீமாஸ் தங்கப்பதக்கம் வென்றாா். இதையடுத்து தங்கம் வென்ற மாணவியை பள்ளித் தலைமையாசிரியை உஷாராணி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.