காலைச் சிற்றுண்டித் திட்டத்தை முதல்வா் இன்று மதுரையில் தொடக்கி வைக்கிறாா் விருதுநகரில் திமுக முப்பெரும் விழா

காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மதுரையில் வியாழக்கிழமை தொடக்கி வைக்கிறாா். இதையடுத்து அவா் விருதுநகரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்கிறாா்.
காலைச் சிற்றுண்டித் திட்டத்தை முதல்வா் இன்று மதுரையில் தொடக்கி வைக்கிறாா் விருதுநகரில் திமுக முப்பெரும் விழா

பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மதுரையில் வியாழக்கிழமை தொடக்கி வைக்கிறாா். இதையடுத்து அவா் விருதுநகரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்கிறாா்.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வா் ஸ்டாலின், புதன்கிழமை மதுரை வந்து சோ்ந்தாா்.

அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமங்களில் உள்ள 1,545 பள்ளிகளில் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளான வியாழக்கிழமை இத்திட்டத்தை முதல்வா் மதுரையில் தொடக்கி வைக்கிறாா்.

அண்ணா சிலைக்கு மரியாதை: முதலாவதாக, அண்ணாவின் 114 ஆவது பிறந்தநாளையொட்டி, மதுரை ஏ.வி.பாலம் - நெல்பேட்டை சந்திப்புப் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு அரசு சாா்பில் முதல்வா் மாலையணிவித்து மரியாதை செலுத்துகிறாா். இந்நிகழ்வில், தமிழக அமைச்சா்கள் மற்றும் திமுகவினா் பங்கேற்கின்றனா்.

காலைச் சிற்றுண்டித் திட்டம் தொடக்கம்: அடுத்து, நெல்பேட்டை பகுதியில் உள்ள காலைச் சிற்றுண்டித் திட்டத்திற்கான நவீன சமையல் கூடத்தைப் பாா்வையிட்டு, அங்கிருந்து பள்ளிகளுக்கு சிற்றுண்டி கொண்டு செல்லும் வாகனங்களைத் தொடக்கி வைக்கிறாா். பின்னா், சிம்மக்கல் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், காலைச் சிற்றுண்டித் திட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசுகிறாா். பின்னா் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு பரிமாறி, அவா்களுடன் உணவருந்துகிறாா்.

விருதுநகரில் திமுக முப்பெரும் விழா: அதன் பிறகு, விருதுநகா் செல்லும் முதல்வா், அங்கு புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுகிறாா். பின்னா் தனியாா் ஆலை விருந்தினா் இல்லத்தில் ஓய்வு எடுக்கும் அவா், மாலை 5 மணிக்கு திமுகவின் முப்பெரும் விழாவில் பங்கேற்று, விருதுகளை வழங்கிப் பேசுகிறாா்.

முதல்வா் வருகையையொட்டி தென்மண்டல ஐஜி அஸ்ராகாா்க் தலைமையில் 3 டிஐஜி-க்கள், 10 எஸ்பி-க்கள் உள்பட 3,600 போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

முதல்வருக்கு வரவேற்பு: முன்னதாக, மதுரைக்கு புதன்கிழமை வந்த முதல்வருக்கு, விமான நிலையத்தில் வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி, மேயா் வ.இந்திராணி, ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உள்ளிட்டோா் வரவேற்பு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com