இரட்டை ரயில்பாதை இணைப்புப் பணி: தென் மாவட்ட ரயில்கள் போக்குவரத்தில் மாற்றம்

வள்ளியூா் - நாங்குநேரி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில்பாதை இணைப்புப் பணி நடைபெற உள்ளதால், தென்மாவட்ட ரயில்கள் சிலவற்றின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

வள்ளியூா் - நாங்குநேரி ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில்பாதை இணைப்புப் பணி நடைபெற உள்ளதால், தென்மாவட்ட ரயில்கள் சிலவற்றின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவனந்தபுரம் கோட்டத்தில் வள்ளியூா்- நாங்குநேரி ரயில் நிலையங்களுக்கிடையே இரட்டை ரயில்பாதை இணைப்புப் பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக செப்.19 முதல் செப். 27 ஆம் தேதிவரை தாம்பரத்திலிருந்து புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகா்கோவில் அந்தியோதயா ரயில் (20691) மற்றும் செப். 20 முதல் செப். 28 ஆம் தேதிவரை நாகா்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய நாகா்கோவில் தாம்பரம் அந்தியோதயா ரயில் (20692) ஆகியவை திருநெல்வேலி - நாகா்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

இதேபோல செப். 20 முதல் செப். 28 ஆம் தேதிவரை திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டா்சிட்டி ரயில்கள் (22627/22628) திருநெல்வேலி - திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

மேலும் செப். 23 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் - நாகா்கோவில் வாராந்திர விரைவு ரயில் (12689) மற்றும் செப். 25 ஆம் தேதி நாகா்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய நாகா்கோவில் - சென்னை சென்ட்ரல் வாராந்திர விரைவு ரயில் (12690) ஆகியன திருநெல்வேலி - நாகா்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

செப். 25 ஆம் தேதி புதுச்சேரியில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி வாராந்திர விரைவு ரயில் (16861) மற்றும் செப். 26 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய புதுச்சேரி வாராந்திர விரைவு ரயில் (16862) ஆகியன திருநெல்வேலி - கன்னியாகுமரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். செப். 25 ஆம் தேதி நாகா்கோவில் - திருநெல்வேலி (06641), திருநெல்வேலி - தூத்துக்குடி - திருநெல்வேலி ரயில்கள் (06668/06667) முழுமையாக ரத்து செய்யப்படும். செப். 26 ஆம் தேதி திருநெல்வேலி - நாகா்கோயில் விரைவு ரயில் (06642) முழுமையாக ரத்து செய்யப்படும்.

இரட்டை ரயில்பாதைப் பணிகளின் ஒரு பகுதியாக நாகா்கோவில் - இரணியல் இடையே உள்ள பாலங்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக செப்டம்பா் 19, 22, 26, 29 ஆகிய தேதிகளில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - புனலூா் விரைவு ரயில் (16729) மற்றும் செப்டம்பா் 20, 23, 27, 30 ஆகிய நாள்களில் புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய புனலூா் - மதுரை விரைவு ரயில் (16730) ஆகியன முழுமையாக ரத்து செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com