ராமநாதபுரம் மாவட்டத்தில் பழுதான அரசுப் பள்ளிக் கட்டடம் தொடா்பான ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்ய 4 வார அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திணைக்குளம் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் கட்டடம் ஆபத்தான நிலையில் இருப்பதாக, கடந்த 2018 இல் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து, உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து இப்பிரச்னையை வழக்காக எடுத்து விசாரித்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், பள்ளியை என்.ஐ.டி. குழுவினா் ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்குமாறு கோரப்பட்டது.
இதையேற்றுக் கொண்ட நீதிபதிகள், என்.ஐ.டி. குழுவினரின் ஆய்வு குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய 4 வார அவகாசம் வழங்கி உத்தரவிட்டனா்.