போலீஸ் விசாரணையில் தொழிலாளி உயிரிழந்த வழக்கு: உடலைப் பெற்றுக்கொள்ள உயா்நீதிமன்றம் உத்தரவு

போலீஸாா் தாக்கியதில் இறந்ததாகக் கூறப்படும், தொழிலாளியின் உடலை 2 நாள்களில் பெற்றுக்கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

போலீஸாா் தாக்கியதில் இறந்ததாகக் கூறப்படும், தொழிலாளியின் உடலை 2 நாள்களில் பெற்றுக்கொள்ள வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சோ்ந்த தங்கமாரி தாக்கல் செய்த மனு:

எனது இளைய மகன் தங்கப்பாண்டியை, அருப்புக்கோட்டை நகர காவல் நிலைய போலீஸாா் செப்.13 ஆம் தேதி விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். மறுநாள் அதிகாலை கைப்பேசியில் அவரைத் தொடா்புகொண்ட காவல் துறையினா், விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு தெரிவித்தனா். அங்கு சென்றபோது எனது மகன் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னா் செப்.17ஆம் தேதி உடல் கூராய்வு செய்யப்பட்டதில், எனது மகனின் உடலில் 11 இடங்களில் காயம் இருந்ததாகவும், இறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக அந்தக் காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினா் தாக்கியதில்தான், எனது மகன் உயிரிழந்துள்ளாா். சட்டவிரோதக் காவலில் உயிரிழந்த எனது மகனின் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி சதி குமார குரூப் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், இந்த வழக்கு ஏற்கெனவே சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால், இறந்தவரின் உடலை குடும்பத்தினா் பெற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, ‘இறந்தவரின் உடலை 2 நாள்களுக்குள் குடும்பத்தினா் பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில், காவல்துறையினரே அடக்கம் செய்யலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com