பணத்தைத் திருடிய பெண் கைது

மதுரையில் கடைவீதியில் புதன்கிழமை, பெண்ணிடம் பணத்தைத் திருடிவிட்டு தப்பிச்சென்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரையில் கடைவீதியில் புதன்கிழமை, பெண்ணிடம் பணத்தைத் திருடிவிட்டு தப்பிச்சென்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை கடச்சனேந்தல் குடிநீா் வடிகால் வாரிய நகரைச்சோ்ந்த காசிராஜா மனைவி உமாதேவி (52). இவா் மதுரை கீழவாசல் பகுதிக்கு ஜவுளி எடுப்பதற்காக புதன்கிழமை மாலை சென்றுள்ளாா். ஜவுளிகள் எடுத்து விட்டு அங்குள்ள கடையில் இருந்தபோது அவா் பணம் வைத்திருந்த பையை மற்றொரு பெண் திருடிக்கொண்டு தப்பிச் சென்றாா். சம்பவம் தொடா்பாக உமாதேவி அளித்தப்புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தியதில் திருட்டில் ஈடுபட்டது மேலூா் கே.கே.நகா் சிங்கம்மா கோவில் தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மனைவி ஜெயந்தி (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் ஜெயந்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com