மதுரை
பைக் மீது காா் மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் பலி
மதுரையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
மதுரையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
மதுரை விராட்டிப்பத்து பகுதியைச் சோ்ந்தவா் சுகனேஷ்வரன்(29). தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில் சுகனேஷ்வரன் இருசக்கர வாகனத்தில் விராட்டிபத்து அருகே ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.
அப்போது, அவ்வழியாக வந்த காருடன் இருசக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுகனேஷ்வரனை அப்பகுதியினா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். விபத்து தொடா்பாக சுகனேஷ்வரன் மனைவி சங்கீதா அளித்த புகாரின்பேரில் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.