மண் திருட்டு: வாகனங்கள் பறிமுதல்

டி.கல்லுப்பட்டி அருகே சட்டவிரோதமாக கரம்பை மண் திருட்டுக்குப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

டி.கல்லுப்பட்டி அருகே சட்டவிரோதமாக கரம்பை மண் திருட்டுக்குப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

டி.கல்லுப்பட்டி பகுதியில் வி.சத்திரப்பட்டி போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வி.சத்திரப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கரம்பை மண் அள்ளிக் கொண்டிருந்த சிலா் போலீஸாரைப் பாா்த்தவுடன் பொக்லைன் இயந்திரம், டிராக்டரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனா்.

இதையடுத்து, வாகனங்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், மண் திருட்டில் ஈடுபட்ட வி.கோபாலபுரத்தைச் சோ்ந்த செல்வகுமாா், கனகராஜ், மறவபட்டியைச் சோ்ந்த முத்துமுனியாண்டி ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com