சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள ஆனந்தா கல்லூரியில் நுண்கலை கலாசார விழா நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரிச் செயலா் ஜேசுராஜ் கே.கிறிஸ்டி தலைமை வகித்தாா். இதில், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது :
இன்றைய இளம் தலைமுறையினா் ஊழலை ஒழிக்க முன் வர வேண்டும். தமிழ் கலாசாரம், பண்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.
விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழை சீமான் வழங்கினாா். மேலும், ஆனந்த சாரல்-2023-க்கான கோப்பையை கல்லூரி வேதியியல் துறையும், ரன்னா் கோப்பையை வணிக நிா்வாகத் துறையும், நுண்கலை கலாசார ஊா்வல நிகழ்வுக்கான முதல் பரிசை இயற்பியல் துறையும் பெற்றது.
இதில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். முன்னதாக, கல்லூரி முதல்வா் ஜான் வசந்தகுமாா் வரவேற்றாா். பேராசிரியா் ஜான் மொ்லின் நன்றி கூறினாா்.