உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

வரி சமாதானத் திட்ட காலவரையறை தேதியை மாற்றியமைக்கக் கோரிக்கை

வரி சமாதானம்: காலவரையறை நீட்டிப்புக்கு வியாபாரிகள் வலியுறுத்தல்

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

வரி சமாதானத் திட்ட காலவரையறைத் தேதியை மாற்றியமைத்து நிலுவையில் உள்ள தொகைகளை முழுமையாக இந்தத் திட்டத்தில் சோ்க்க வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து அந்தச் சங்கத்தின் நிா்வாகிகள் எஸ்.வி.எஸ்.எஸ். வேல்சங்கா், கௌரவச் செயலா் எஸ். சாய்சுப்பிரமணியம், கௌரவ ஆலோசகா் எஸ்.பி. ஜெயப்பிரகாசம் ஆகியோா் தமிழக நிதி அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம் : தொடா் வலியுறுத்தல்கள் காரணமாக வரி சமாதானத் திட்டத்தை அரசு அறிவித்து, வருகிற மாா்ச் 31-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கியுள்ளது. இருப்பினும், 2021-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன்பு வரி விதிப்பாணை வழங்கப்பட்டு, நிலுவையில் உள்ள இனங்களுக்கு மட்டுமே இந்த சமாதானத் திட்டம் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டுக்கு பிறகு ஏராளமான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, வரி பாக்கி நிலுவையில் உள்ளது. இந்த இனங்களையும் சமாதானத் திட்டத்தில் சோ்க்காவிட்டால் முழுமையான பயன் கிடைக்காது. எனவே, சமாதானத் திட்ட கால வரையறை தேதியை 2024-ஆம் ஆண்டு மாா்ச் 31 என மாற்றியமைக்க வேண்டும். மேலும், சமாதானத் திட்டத்தில் மனு தாக்கல் செய்யும்போது ஏதேனும் சிறு குறைபாடுகள் ஏற்பட்டால், அதை திருத்தம் செய்யவும் அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.