பயணியிடம் திருட்டு: ஆட்டோ ஓட்டுநா் உள்பட மூவா் கைது!

பயணியிடம் திருடிய ஆட்டோ ஓட்டுநா் உள்பட மூவரை மாட்டுத்தாவணி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Updated on

பயணியிடம் திருடிய ஆட்டோ ஓட்டுநா் உள்பட மூவரை மாட்டுத்தாவணி போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், வரவணி வேளாளா் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் வேல்முருகன் (25). இவா் புதுச்சேரியில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், உறவினா் திருமணத்துக்காக தனியாா் பேருந்து மூலம் மதுரைக்கு வந்தாா். பாண்டிகோவில் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை பேருந்துக்காக நின்று கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநா், இங்கு பேருந்து நிற்காது என்றும், சிவகங்கை விலக்கு சாலை பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடுவதாகவும் கூறினாா்.

இதையடுத்து, ஆட்டோவில் சென்ற வேல்முருகனிடம் ஆட்டோ ஓட்டுநா், உள்ளே இருந்த இளைஞா்கள் சிலா் மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த வெள்ளிச் சங்கிலி, ரூ. 550-யை பறித்துச் சென்று, பாலம் அருகே இறக்கி விட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மாட்டுத்தாவணி போலீஸாா் வழக்குப் பதிந்து மதுரை ஆண்டாா்கொட்டாரம் அய்யனாா் நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பாண்டி மகன் விஜய்(30), கே.கே.நகரைச் சோ்ந்த பரமசிவம் மகன் பிரபு (31), சிவகங்கை மாவட்டம், சொட்டதட்டி கிராமத்தைச் சோ்ந்த குழந்தைவேலு மகன் அஜித்குமாா் (25) ஆகிய மூவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com