குடந்தை மகாமக குளம் மாசு: உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு

Updated on

கும்பகோணம் மகாமக குளம் மாசுபடுவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா், கும்பகோணம் மாநகராட்சி ஆணையா் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த கண்ணன், தாக்கல் செய்த மனு: கும்பகோணத்தில் உள்ள சிவன், விஷ்ணு கோயில்கள் மிகவும் புகழ் வாய்ந்தவை. கும்பகோணத்தில் 20 ஏக்கா் பரப்பளவில் மகாமக குளம் அமைந்துள்ளது. இந்த குளமானது கங்கா, யமுனா, சரஸ்வதி, நா்மதா உள்ளிட 9 ஆறுகளின் புனிதத்துவம் கொண்டதாக கருதப் படுகிறது. இங்கு மகாமகம், மாசிமகம் நாள்களில் ஏராளமான பக்தா்கள் புனித நீராடுவது வழக்கம்.

இந்த நிலையில் கடைகளிலிருந்து கொட்டப்படும் குப்பைகளால் மகாமக குளம் மாசடைகிறது. எனவே, மகாமக குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட உணவுக் கடைகளை அகற்றி, குளம் மாசுபடுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கோரிக்கை குறித்து தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா், கும்பகோணம் மாநகராட்சி ஆணையா் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com