ராமநாதபுரத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தின விழா

ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் வகையில்,  மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் பொதுமக்களுக்கு
Published on
Updated on
1 min read

ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் வகையில்,  மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன.
விழாவுக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. கயல்விழி தலைமை வகித்து, நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்து, பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
விழாவில் கூடுதல் மாவட்ட நீதிபதி டி. லிங்கேசுவரன், தலைமைக் குற்றவியல் நீதிபதி டி.வி. அனில்குமார், சார்பு நீதிபதி எம். பிரீத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலர் சி. சொர்ணகுமார் வரவேற்றார்.
ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. கயல்விழி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்தும், மரங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கினார்.
மாவட்ட உரிமையியல் நீதிபதி எம். ராஜேஷ்குமார், வழக்குரைஞர் சங்கத் தலைவர் அழகு. பாலகிருஷ்ணன், வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com