மதுக்கடைக்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி தமிழர் நல பேரியக்கத்தினர் புதன்கிழமை கடைக்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on
Updated on
1 min read

ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி தமிழர் நல பேரியக்கத்தினர் புதன்கிழமை கடைக்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  மதுக்கடை முன்பு நடைபெற்ற கருப்புச் சட்டை அணிந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞர் தீரன் திருமுருகன் தலைமை வகித்தார். பேரியக்கத்தின் மாநில இளைஞர் குழு நிர்வாகி சீலன்,பிரபாகரன் முன்னிலை வகித்தார். அமைப்பின் வழக்குரைஞர் பிரிவு நிர்வாகி டேவிட், நகர் செயலாளர் சுரேஷ் ஆகியோர் உள்பட பேரியக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டம் காரணமாக சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டு விடாமல் இருக்க கடை ஏற்கனவே பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் கடை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் திடீரென ஏற்கெனவே பூட்டியிருந்த கடைக் கதவின் மேல்புறத்தில் மேலும் ஒரு பூட்டு போட்டனர்.  தகவலறிந்து அங்கு வந்த போலீஸார் 15 தினங்களுக்குள் கடையை மாற்றிட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com