குடிபோதையில் பொது இடத்தில் தகராறில் ஈடுபட்ட இருவரை புதன்கிழமை கீழத்தூவல் போலீஸார் கைது செய்தனர்.
முதுகுளத்தூர் அருகேயுள்ள கொழுந்துரை கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி மகன் பாலு(55) அதே ஊரைச்சேர்ந்த கருப்பன் மகன் சுப்பிரமணி(47)ஆகிய இருவரும் திருவரங்கததில் மது அருந்திவிட்டு ஊருக்குச் செல்ல திருவரங்கம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் தகாராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவரை ஒருவர் தாக்க முயன்றபோது அந்த வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கீழத்தூவல் காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் ஞானசேகரன் இருவரையும் கைது செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.