மகனுக்கு கத்திக்குத்து: தந்தை கைது

கமுதி அருகே செவ்வாய்க்கிழமை குடும்பத் தகராறில் மகனை கத்தியால் குத்திய தந்தை கைது செய்யப்பட்டார்.
Published on
Updated on
1 min read

கமுதி அருகே செவ்வாய்க்கிழமை குடும்பத் தகராறில் மகனை கத்தியால் குத்திய தந்தை கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கே.நெடுங்குளத்தை சேர்ந்த கருப்பையா (65). இவரது மகன் அய்யனார்(45). இவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு காரணமாக அடிக்கடி தகராறு வந்துள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில் கருப்பையா தனது மகன் அய்யனாரை கத்தியால் குத்தினாராம்.  இதில் பலத்த காயமடைந்த அய்யனார் கமுதி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக கமுதி காவல் நிலையத்தில் அய்யனார்  அளித்தப்புகாரின்பேரில் போலீஸார் கருப்பையாவைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com