ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் அமைந்துள்ள சிவகாமி சமேத நடராஜர் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
இத்திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் புதன்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கின. இதனைத் தொடர்ந்து தனபூஜை,கலச பூஜை,நவக்கிரக ஹோமம் ஆகியனவும் நடைபெற்றது.
வியாழக்கிழமை இரண்டாவது நாளாக கோ.பூஜை,சுமங்கலி மற்றும் தம்பதியர் பூஜை ஆகியனவும் நடந்தது. வெள்ளிக்கிழமை காலையில் கஜபூஜை முடிந்தவுடன் யாக சாலையிலிருந்து புனித நீர்க்குடங்கள் ராஜகோபுரத்திற்கு சிவாச்சாரியார்களால் எடுத்து செல்லப்பட்டு காலை 9 மணி முதல் 9.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மூலவரான அருள்மிகு நடராஜருக்கும்,சிவகாமி உள்பட பல்வேறு பரிவார தெய்வங்களுக்கும் சிபு அபிஷேகமும்,விசேஷ தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.
பின்னர் அன்னதானமும், மாலையில் திருக்கல்யாண வைபவமும்,இரவு திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது. யாகசாலை பூஜைகள் திருவாடானை சிவாச்சாரியார் வி.ஆதிரெத்தினம் தலைமையில் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை அழகன்குளம் செங்குந்த முதலியார் சமூகத்தினர் மற்றும் திருப்பணிக் குழு நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.