இருசக்கர வாகன விபத்து: இளைஞர் சாவு

கமுதியை அடுத்த அபிராமம் அருகே உள்ள அருந்ததியர் குடியிருப்பைச் சேர்ந்தவர் மூர்த்தி மகன் திருமுருகன்(28). இவர், தனது இருசக்கர

கமுதியை அடுத்த அபிராமம் அருகே உள்ள அருந்ததியர் குடியிருப்பைச் சேர்ந்தவர் மூர்த்தி மகன் திருமுருகன்(28). இவர், தனது இருசக்கர வாகனத்தில் நண்பர்களான அதே ஊரைச் சேர்ந்த குமரவேல், முத்துப்பாண்டி ஆகியோருடன் அபிராமம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது புதூர் கண்மாய்க்கரை அருகே வந்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் காயமடைந்த 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் திருமுருகனை மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் திருமுருகன் ஏற்கெனவேஇறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் அபிராமம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com