ராமநாதசுவாமி திருக்கோயிலின் உபகோயிலான கெந்தமாதன பர்வதம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலின் உப கோயிலான கெந்தமாதன பர்வதத்தில் உள்ள ராமர் பாதம் கோயிலுக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
ஆனால், கோயிலுக்கு அருகே சாலை சேதமடைந்துள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.