கமுதி அருகே சிலம்பாட்டப் போட்டி: 3 மாவட்ட மாணவர்கள் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டம்  கமுதி அருகே வியாழக்கிழமை நடைபெற்ற மண்டல அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 222 மாணவர்கள் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம்  கமுதி அருகே வியாழக்கிழமை நடைபெற்ற மண்டல அளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 222 மாணவர்கள் பங்கேற்றனர்.
    கமுதியை அடுத்துள்ள அபிராமத்தில் உள்ள முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் சிலம்பாட்டப் போட்டி பள்ளி தாளாளர் காதர் மீராகனி தலைமையில் நடைபெற்றது. பள்ளிச் செயலர் நயினா முகமது, உடற்கல்வி இயக்குனர் அன்சாரி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இப்போட்டி ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த  மண்டல அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே போட்டிகள் நடைபெற்றது. இதில்  222 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். 
   இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. இங்கு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாநில அளவில் நடைபெறும்  போட்டிகளில் விளையாடத்  தகுதி பெற்றனர். போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் மணிமாறன், ஆசிரியை ரஷிமா ஆசியோர் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com