முதுகுளத்தூர் மந்தைபிடாரி அம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து காலையில் பெண்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பல்வேறு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
மாலையில் கந்தசாமிபுரத்தில் இருந்து தேரிருவேலி முனை சாலை வழியாக பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள சுந்தரலிங்கனார் முழு உருவச்சிலைக்கு பெண்கள் ஊர்வலமாகச் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.