ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சனிக்கிழமை (அக்.13) வாக்காளர் பட்டியல் குறித்த சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெள்ளிக்கிழமை வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சனிக்கிழமை கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்கள் பொதுமக்களுக்கு வாசித்துக் காட்டப்படும். இளம் வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்கவும், வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மற்றும் நீக்கம் செய்யவும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இவ்விரு நிகழ்வுகளையும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.