அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் சாவு

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து பெண்

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து பெண் சனிக்கிழமை உயிரிழந்தார்.
கடலாடி வட்டம் சிக்கல் அருகே பி. கீரந்தை கிராமத்தில் வசிப்பவர் நாராயணன். இவருடைய  மனைவி லட்சுமி (57). இவர் வீட்டின் அருகே வேலை செய்து கொண்டிருந்தார். அங்கே பழுதான உயரழுத்த மின் கம்பி அருகே அறுந்து கிடந்துள்ளது. அதனை அறியாமல் மின் கம்பியை மிதித்ததில் அவர் மீது  மின்சாரம் பாய்ந்து  சம்பவ இடத்திலேயே லட்சுமி உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீஸார் அவரது சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து கடலாடி துணை வட்டாட்சியர் செந்தில்வேல்முருகன் விசாரணை நடத்தினார்.
இது குறித்து சிக்கல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com