ராமநாதபுரம் முத்தாலம்மன் கோயிலில் உள்ள அம்மனுக்கு தங்க முலாம் பூசப்பட்டபாவாடையை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முத்தாலம்மன் மகளிர் மன்றத்தின் தலைவி உஷா சுப்பிரமணியன், செயலாளர் கீதா ரகுநாத் மற்றும் உறுப்பினர்கள் முத்தாலம்மனுக்கு தங்க முலாம் பூசப்பட்ட தங்கப்பாவாடை, தங்க கிரீடம், தங்கச் சட்டை ஆகியனவற்றை அன்பளிப்பாக வழங்கினர்.
இதனை ராமநாதபுரம் ஆயிரவைசிய மகாஜன சபையின் தலைவர் பா.மோகன், பொருளாளர் பி.ஜானகிராமன், கோயில் நிர்வாக அறங்காவலர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். நவராத்திரியை முன்னிட்டு ஆலய வளாகத்தில் பரமக்குடி ஜனனி மன்ற குழுவினரின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.